பணப்பட்டுவாடா செய்த திமுகவினர்.. போலீசார் மீது தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதனாஞ்சேரி செங்கத்து வட்டம் பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

Update: 2021-04-05 03:23 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதனாஞ்சேரி செங்கத்து வட்டம் பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில்  ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது,. தகவலின்பேரில்  சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்  பணத்துடன் சுற்றித்திரிந்த 2 பேரை கைது செய்தனர்,. அப்போது அவர்களிடமிருந்த 54 ஆயிரம் ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்டது,. இந்த நிலையில் போலீசார் வாகனத்தை வழிமறித்த திமுகவினர், போலீசாரை தாக்கிவிட்டு பணத்தையும் கைது செய்யப்பட்டவர்களையும் மீட்டு சென்றுள்ளனர்,. இதனையடுத்து காயம் அடைந்த  காவல் உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்,.

Tags:    

மேலும் செய்திகள்