குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை; மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம் - விஜயபிரபாகரன் பிரசாரம்

குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை என்றும் மக்களுக்காக உழைக்க வந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-30 03:21 GMT
குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை என்றும் மக்களுக்காக உழைக்க வந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் அமமுக - தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து அவரது மகன் விஜயபிரபாகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக பிரேமலதா விஜயகாந்த் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்