அமைச்சருடன் சென்ற காரில் சோதனை - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

கோவில்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் சென்ற அவரது ஆதரவாளர்கள் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

Update: 2021-03-02 14:06 GMT
 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கழுகுமலை பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தன் ஆதரவாளர்களுடன் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அமைச்சரின் ஆதரவாளர்கள் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர், காரில் பணம் ஏதும் உள்ளதா என சோதனையிட்டனர். இதனால் சிறிய பரபரப்பு ஏற்பட்டது. 


Tags:    

மேலும் செய்திகள்