சமுதாயத்தில் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - மருத்துவ மாணவர்களிடம் பிரதமர் பேச்சு

இந்திய சுகாதார கட்டமைப்பு புதிய கண்ணோட்டத்துடனும், நம்பகத்தன்மையுடன் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-26 08:48 GMT
இந்திய சுகாதார கட்டமைப்பு புதிய கண்ணோட்டத்துடனும், நம்பகத்தன்மையுடன் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடி, சமுதாயத்தில் அடையாளத்தை உருவாக்குவதற்கான நேரம் இது என மாணவர்களிடம் தெரிவித்தார்

கொரோனா காலத்தில் இந்தியா புதிய பாதையை வழிவகுத்தது மட்டுமின்றி பல நாடுகளுக்கு உதவியதாக பெருமிதம் தெரிவித்தார்.

உலக நாடுகளின் கவனம் இந்திய மருத்துவர்களின் பக்கம் உள்ளதால், இளம் மருத்துவர்களின் தோளில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 

ஏழைகளுக்காக அரசு நிர்வாகத்தை நடத்தியவர் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என புகழாரம் சூட்டினார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் கூடுதலாக 30,000 இளநிலை மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்