தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் படகு மூழ்கி உயிரிழந்த தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2021-01-23 12:33 GMT
இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் படகு மூழ்கி உயிரிழந்த தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து மீனவர்கள் 4 பேர் விசைப்படகில் கடலுக்கு சென்ற போது, இலங்கை கடற்படை கப்பல் மோதி படகு நீரில் மூழ்கியது. இதில் மீனவர்கள் செந்தில் குமார், நாகராஜ், சாம்சங், மெசியான் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். தொடர்ந்து 4 பேரின் உடலை இலங்கை கடற்படையினர் மீட்டு, சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடனரிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து கோட்டைப்பட்டினம் துறைமுகத்திற்கு பிற்பகலில் உடல் கொண்டு வரப்பட்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும், பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் வரவழைக்கப்பட்டு, அவரவர் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்