"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-23 12:26 GMT
அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல்காந்தி தமிழகம் வந்துள்ளார். இதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து கொண்டே பேசிய அவர், தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் பிரச்சினைகளை காங்கிரஸ்  புரிந்து வைத்துள்ளதாக கூறிய ராகுல், தமிழக மக்களுடன் தனக்கான உறவு அரசியல் ரீதியிலானது மட்டுமல்லாமல், அதனை குடும்ப உறவாக கருதுகிறேன் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்