செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கர் அதிரடி கைது

சசிகலாவின் உறவினர் பாஸ்கரை, செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீசார் சென்னையில் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-01-08 03:44 GMT
சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமன். விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் ஆவார். அண்ணா நகரில் வசித்து வரும் பாஸ்கரை செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசார் இன்று கைது செய்துள்ளனர். செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் பாஸ்கர் மற்றும் அவரது தம்பி சிட்டி ராஜா ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் பாஸ்கர் மற்றும் அவரது தம்பி சிட்டி ராஜா கைது செய்யப்பட்டார். செம்மரக்கட்டை கடத்தலை மறைக்க பர்னிச்சர் கடை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 48 கோடி ரூபாய் மதிப்பு செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில், தேடப்பட்டு வந்த பாஸ்கர் மீது 28 வழக்குகள்  நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 20 பேர் அடங்கிய ஆந்திர தனிப்படை போலீசார் அண்ணா நகரில் இருந்த பாஸ்கரை அதிரடியாக கைது செய்து ஆந்திரா அழைத்துச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்