"ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தப்பட்டது ரப்பர் பாம்புதான்"

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தப்பட்டது ரப்பர் பாம்பு தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

Update: 2020-11-22 08:51 GMT
சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் காட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. சிலம்பரசன் கையில் பாம்பை பிடித்து வைத்திருப்பது போல இருந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விளக்கம் கேட்டு படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து, அந்த காட்சி எடுக்கப்பட்டது குறித்து, இயக்குனர் சுசீந்திரன் வனதுறை அதிகாரியிடம் நேரில் சென்று விளக்கினார். இது குறித்து வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் கூறும் போது, ரப்பர் பாம்பை வைத்து நுணுக்கமாக எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை படக்குழு விளக்கியதாக தெரிவித்தார். 
இந்த காட்சி குறித்து தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தத்ரூபமாக எடுத்துள்ள படக்குழுவினரை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்