அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க கஜா புயல் நிவாரணம் ரூ. 1.5 லட்சத்தை வழங்கிய பெண்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நாடாகாடு கிராமத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் கஜா புயல் பாதிப்புக்காக அரசு தனக்கு வழங்கிய ஒன்றரை லட்ச ரூபாயை அரசு பள்ளியில் வாலிபால் மைதானம் அமைக்க நன்கொடையாக கொடுத்து உதவியுள்ளார்.

Update: 2020-11-20 02:53 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நாடாகாடு கிராமத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் கஜா புயல் பாதிப்புக்காக அரசு தனக்கு வழங்கிய  ஒன்றரை லட்ச ரூபாயை அரசு பள்ளியில் வாலிபால் மைதானம் அமைக்க நன்கொடையாக கொடுத்து உதவியுள்ளார்.  அவர் வழங்கிய நிதியுதவி மூலம் பேராவூரணியில் உள்ள  அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாலிபால் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் பாக்கிய லட்சுமி முன்னின்று ஈடுபடுவதை கண்டு அப்பகுதி மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்