சிலிண்டர் வெடித்து விபத்து - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-11-15 10:02 GMT
ஆரணியை சேர்ந்த முத்தம்மாள் என்பவரின் வீட்டில் எரிவாயு கசிவு காரணமாக, சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், காமாட்சி, சந்திரா அம்மாள் மற்றும் ஹேமநாதன்
என்ற சிறுவன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்