கடைக்கு வெளியே தூங்குவது போல நடிப்பு - செல்போன்களை திருடி சென்ற இளைஞர்

சென்னையில் அடுத்த‌டுத்த கடைகளில் படுத்து தூங்குவது போல நடித்து செல்போன்களை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலை அருகே உள்ள பால்கடை மற்றும் இனிப்பகங்களில் வேலை செய்பவர்கள் கடைக்கு உள்ளே படுத்திருந்த‌தாக தெரிகிறது.

Update: 2020-11-09 02:58 GMT
சென்னையில் அடுத்த‌டுத்த கடைகளில் படுத்து தூங்குவது போல நடித்து செல்போன்களை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலை அருகே உள்ள பால்கடை மற்றும் இனிப்பகங்களில் வேலை செய்பவர்கள் கடைக்கு உள்ளே படுத்திருந்த‌தாக தெரிகிறது. அதிகாலை எழுந்து பார்த்தபோது அவர்களது செல்போன் மாயமாகி இருந்த‌து. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது,  கடைக்கு வெளியே படுத்திருப்பது போல நடித்த இளைஞர் ஒருவர், கடைக்குள் புகுந்து செல்போன்களை திருடி சென்றது பதிவாகியிருந்த‌து. 

Tags:    

மேலும் செய்திகள்