ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை - ரூ.92 ஆயிரம் பறிமுதல் என தகவல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் செந்தில்வேல் என்பவர் தொடர்ந்து முறைகேடாக பணம் பெற்று வந்துள்ளார்,.

Update: 2020-11-07 08:11 GMT
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட  ஊராட்சிகள் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் செந்தில்வேல் என்பவர் தொடர்ந்து முறைகேடாக பணம் பெற்று வந்துள்ளார்,. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார்  ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்,.  சோதனையில் இதுவரை 92 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது,. மேலும்  உதவி இயக்குனர் செந்தில் வேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்