பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் நீட்டிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல், மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-06 13:15 GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல், மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு அக்டோபர் 9ஆம் தேதி முதல் 30 நாள் பரோல் வழங்கப்பட்டது. நவம்பர் 9ஆம் தேதியுடன் பரோல் முடிவடைவதால், மருத்துவ சிகிச்சைக்காக மேலும் 30 நாட்களுக்கு பரோல் நீட்டிப்பு கேட்டு அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நவம்பர் 23ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்