சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையாளர் கைது

வடசென்னையில் ஒருநம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மொத்த வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-15 12:42 GMT
வடசென்னையில் ஒருநம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மொத்த வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குறிப்பிட்ட பெயரை கொண்ட எழுத்துகளை மட்டும் வைத்துக் கொண்டு வடசென்னை பகுதியில் லாட்டரி விற்பதாக செல்வமணி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் 3 மாநிலங்களை சேர்ந்த லாட்டரிகளை விற்பனை செய்வதை ஒப்புக் கொண்டார். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்ததை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்