இருசக்கர வாகனம் மீது லோடு வாகனம் மோதி விபத்து - திமுக முன்னாள் எம்.எல்.ஏ உள்பட இருவர் உயிரிழப்பு

சிவகங்கை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2020-10-13 10:34 GMT
திமுக முன்னாள் எம்.எல்.ஏ மனோகரன், அவரது நண்பர் சைபுதின் இருவரும் சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். படமாத்தூர் என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த லோடு வாகனம் ஒன்று, இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லோடு வாகனமும் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், அதில் பயணம் செய்த 2 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்