'இரண்டாம் குத்து' பட இயக்குநர் மீது புகார் - இளைஞர்கள் வாழ்வை சீரழிப்பதாக குற்றச்சாட்டு

'இரண்டாம் குத்து' படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2020-10-13 04:37 GMT
'இரண்டாம் குத்து' படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆபாசமான முறையில் வெளியாகி இருக்கும் இரண்டாம் குத்து படத்தின் டீசர், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் உள்ளதாக கூறி, வடபழனியை சேர்ந்த கோபிநாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்