தரை மட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை - மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு

கரூர் அருகே வீட்டிலிருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-10-12 12:11 GMT
கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பகுதியைச் சேர்ந்தவர், தண்டபாணி. கட்டிட தொழிலாளியான இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை இளநிகா வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டில் குழந்தை இளநிகா தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த தாய் நவமணி, குழந்தையை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் இன்றி, பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்