15 வயது பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை - திருமணம் செய்வதாக அழைத்த சென்ற நபர் போக்சோவில் அடைப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 15 வயது பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் ஏ.டி. காலனியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் பிரித்திகா, அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துள்ளார் . இவர், பிரவீன் என்பவரை காதலித்து வந்ததாகவும்,பிரவீன் கடந்த மாதம் திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, பிரித்திகாவை மீட்ட, போலீசார் பிரவீனை, போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெற்றோருடன் இருந்து வந்த பிரித்திகா நேற்று இரவு யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.