ரூ. 55 கோடியில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலம் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை வண்டலூரில் 55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Update: 2020-09-17 07:48 GMT
சென்னை அடுத்த வண்டலூரில், மாம்பாக்கம்- கேளம்பாக்கம் சந்திப்பு சாலையில், புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே பில்லரில் ஆறு வழிப்பாதைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புதிய பாலத்தின் வழியே போக்குவரத்து சேவையை,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்