வேளாங்கண்ணியில் வெளி மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று முதல் வெளி மாநில, மாவட்ட பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று முதல் வெளி மாநில, மாவட்ட பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தற்போது, பேருந்து மற்றும் ரயில் சேவை துவங்கப்பட்டதால், வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.