ஓராண்டிற்குள் எய்ம்ஸ் கட்டிட பணிகள் நிறைவடையும்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

Update: 2020-08-26 14:51 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த  மேலக்கோட்டையில் இலவச மருத்துவ பரிசோதனை  முகாமை  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.  உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் 18 சதவீதத்தில் இருந்து 2 புள்ளி 5 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் என்றும் தெரிவித்தார்,. மேலும், இன்னும் ஓராண்டிற்குள் எய்ம்ஸ் கட்டிட பணிகள் முழுமையாக முடிவடைந்து, மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்றும் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்