பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்க கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, தனித் தேர்வை பொறுத்தவரை நடத்தி முடிக்கப்பட்ட இரண்டு வாரத்தில் அதன் முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை திறப்பது தொடர்பாக அரசு எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.