கேரளாவுக்கு உதவ தயார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கேரளாவில் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
கேரளாவில், மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.