கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-08-07 02:43 GMT
தென் மேற்கு பருவமழையானது உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உதகையை சுற்றியுள்ள இத்தலார், எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடரும் கன மழையால்  பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எமரால்டு பகுதி சத்தியா நகரில்  திடீரென நிலச்சரிவால் பூமி பிளவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி முகாம்களில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்