பெரியார் குறித்து அவதூறு கருத்து - பாஜக உறுப்பினர் கைது

கோவை மாவட்டம் அன்னூரில் பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட, பாஜக உறுப்பினர் நந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-08-01 04:53 GMT
கோவை மாவட்டம் அன்னூரில் பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட, பாஜக உறுப்பினர் நந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2 வாரமாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், கணேசபுரம் அருகே அவரை கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நந்தகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்