சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகரில் அதிக கொரோனா பாதிப்பு - பால், மருந்து கடைகளுக்கு மட்டுமே அனுமதி
சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக அதிக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் இன்று முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே, விருதுநகர் மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.