கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கும்மிடிப்பூண்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சகுந்தலா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கும்மிடிப்பூண்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சகுந்தலா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், சோழவரத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த, அவருக்கு கடந்த 3 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்து அவர் விடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து பல்வேறு நோய் பாதிப்பு காரணமாக அந்த மருத்துவமனையிலேயே தங்கி தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சகுந்தலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்