5 சிறப்பு விமானங்கள் மூலம் 873 பேர் சென்னை வருகை

கொரோனா ஊரடங்கால் ஒமென், குவைத், கத்தார், சார்ஜா ஆகிய நாடுகளில் சிக்கி தவித்த 873 பேர் 5 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர்.

Update: 2020-07-24 04:39 GMT
கொரோனா ஊரடங்கால் ஒமென், குவைத், கத்தார், சார்ஜா ஆகிய நாடுகளில் சிக்கி தவித்த 873 பேர் 5 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர். 873 பேருக்கும், விமான நிலைத்திலேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில், கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர், அனைவரும் அரசு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, சென்னையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


Tags:    

மேலும் செய்திகள்