"மகேந்திரன் மரணம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" : நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-22 11:21 GMT
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த மே மாதம் தன் மகன் மகேந்திரன் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்ததில் பலத்த காயமடைந்த அவர், உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது தொடர்பான கடிதம் வழங்கப்பட்டது.  அப்போது மகேந்திரனின் தாய் வடிவுக்கு பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை நெல்லை டிஎஸ்பி ஆகஸ்ட் 7ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்