திருச்சி சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம் : கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை

திருச்சியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

Update: 2020-07-07 09:45 GMT
திருச்சி அதவத்தூரை சேர்ந்த 14 வயதான சிறுமி நேற்று மாலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிறுமியின் சடலம் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என அதில் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்