தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இன்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-07-05 02:50 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இம்மாதம் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தமிழகம் முழுவதும், எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று, மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். இதேபோன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் இன்று அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்