மல்டி லெவல் மார்க்கெட்டிங் மோசடியாளர் ஜான் பிரபாகரன் படுகொலை - தலையணையால் அழுத்தி மனைவியே கொலை செய்தது அம்பலம்

தமிழகத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் 500 கோடி ரூபாய் மோசடி செய்த ஜான் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-06-29 04:22 GMT
சென்னையை சேர்ந்த ஜான் பிரபாகரன், சுகன்யா தம்பதியினர் கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்களிடையே 500 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்து மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்த ஜான் பிரபாகரன் அங்கிருந்து தப்பிச்சென்று ஹைதராபாத்தில் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார்.  அவரது மரணத்தில் சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தியதில் சுகன்யா, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கணவருக்காக சிறைவாசம் அனுபவித்த நிலையில், அவர் வேறு பெண்ணுடம் குடும்பம் நடத்தியது  ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், தலையணையால் அழுத்தி கொலை செய்ததாக சுகன்யா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்