தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில், புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-21 16:52 GMT
தமிழகத்தில், புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று ஆயிரத்து 39 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனாவுக்கு ஒரேநாளில் 53 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து, புதிதாக ஆயிரத்து 438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்