காசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு - தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

நாகர்கோவில் காசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-10 10:31 GMT
பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசி கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் காசியின் மீது பதிவு செய்யப்பட்டவை அனைத்தும் பொய் வழக்குகள் என்பதால் குண்டர் சட்டத்தை ரத்து  செய்ய உத்தரவிட வேண்டும் என காசியின் தந்தை தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்