செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம் - மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

Update: 2020-06-04 09:45 GMT
சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் ரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மத்திய அரசை பாராட்டி நடிகர் ரஜினி கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், நாட்டில் உள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதில் பதிவிட்டிருந்தார்
Tags:    

மேலும் செய்திகள்