தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணவே விரும்புகிறோம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணவே விரும்புகிறோம் என்றும், மனு செய்யும் போது வழக்கில் தொடர்புடையவர்களின் செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரியபடுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2020-06-04 02:28 GMT
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணவே விரும்புகிறோம் என்றும், மனு செய்யும் போது வழக்கில் தொடர்புடையவர்களின் செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரியபடுத்த வேண்டும் என்றும்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள், அனைத்து விவரத்தையும் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நீதிபதிகள், இதனால், சம்பந்தப்பட்டவர்கள் தேவையின்றி நீதிமன்றத்திற்கு வருவது தவிர்க்கப்படும் என்றும் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்