போலி மருத்துவர் கைது - மருத்துவமனைக்கு சீல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாணாவரத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் தயாளன் என்பவர் கைது செய்யப்பட்டார்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாணாவரத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் தயாளன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து மாவட்ட மருத்துவ அலுவலர் கீர்த்தி, அவர் நடத்தி வந்த கிளினிக்கில் ஆய்வு நடத்தினர். அபபோது அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரையடுத்து போலீசார் தயாளனை கைது செய்தனர்.