அமைச்சர் எஸ்.பி .வேலுமணி குறித்து அவதூறு என புகார் - திமுக மாவட்டச் செயலாளர் -அவரது உதவியாளர் கைது

அமைச்சர் எஸ்.பி .வேலுமணி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-05-31 03:09 GMT
ஆதாரம் இல்லாத செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பியதாக,  கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர்  தென்றல் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக  சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் அளித்துள்ள புகாரில், அமைச்சர் வேலுமணி மீது அவதூறு பிரசாரம் செய்ததாக கூறியுள்ளார். அமைச்சரின்  நற்பெயருக்கு, மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆதாரம் இல்லாத செய்தியை பரப்பியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ்,  தென்றல் செல்வராஜை போலீசார் கைது செய்தனர். வீடியோவை பதிவேற்றம் செய்ததாக அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் என்பவரையும் போலீசார் கைதுசெய்தனர். இந்த சம்பவத்தால் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

///////////////////////
Tags:    

மேலும் செய்திகள்