தூர் வாரும் பணிகளைத் துரிதப்படுத்த கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடுவதை அடுத்து நாகையில் குறுவை சாகுபடிக்காக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Update: 2020-05-28 07:15 GMT
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடுவதை அடுத்து, நாகையில் குறுவை சாகுபடிக்காக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சிக்கல், கீழ்வேளூர், பாலையூர், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் மற்றும் கிளை வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்