"கட்டணம் செலுத்தும் விவகாரத்தை பரிவுடன் அணுக வேண்டும்" - பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யூஜிசி உத்தரவு

மாணவர்கள் கட்டணங்கள் செலுத்தும் விவகாரத்தை, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பரிவுடன் அணுக வேண்டும் என்று, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-05-28 01:52 GMT
பல்கலைக்கழக மானியக் குழு  பிறப்பித்துள்ள உத்தரவில், தற்போது நிலவும் கொரோனா சூழல் காரணமாக, ஆண்டு கல்விக் கட்டணம், செமஸ்டர் கட்டுவது செலுத்துவது தொடர்பாக, மாணவர்கள் தனிப்பட்ட முறையில் வைக்கும் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.தற்போதுள்ள நிலைமை சீரடையும் வரை, வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், கட்டணங்களை செலுத்துவதற்கு மாற்று வழிமுறைகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ள யூஜிசி, இந்த விவகாரத்தை, பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பரிவுடன் அணுகவேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்