கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு - கைது செய்யப்பட்ட 12 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்

கொரோனா வைரசால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததாக கைதான 12 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Update: 2020-05-23 13:28 GMT
சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழ்வேந்தன், அப்பு, உள்ளிட்ட12 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதி நிர்மல்குமார் விசாரித்தார். அப்போது, கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் அடக்கம் செய்யப் போவதாக வந்த தகவலால், எதிர்ப்பு தெரிவித்ததாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,12 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்