போலியாக இ- பாஸ் தயாரித்த வழக்கு - முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

போலியாக இபாஸ் தயாரித்த நபருக்கு முன்ஜாமீன் வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-19 03:47 GMT
போலியாக ஈ- பாஸ் தயாரித்த நபருக்கு முன்ஜாமீன் வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கின் போது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல போலியாக ஈ பாஸ் தயாரித்ததாக, நெல்லையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க, தனக்கு முன்ஜாமீன் கோரி ஜாபர் சாதிக், உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
Tags:    

மேலும் செய்திகள்