ஊரடங்கால் துபாயில் சிக்கிய 178 பேர் சென்னை வருகை - சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்

ஊரடங்கால் துபாயில் சிக்கிய 178 பேர் சென்னை வருகை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்

Update: 2020-05-18 09:19 GMT
ஊரடங்கால் துபாயில் சிக்கிய 178 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். வெளிநாடுகளில் தங்கி உள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர 60க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படு​கின்றன. இதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்து 691 பேர் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 178 பேர் சென்னை வந்தனர். அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்