ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த முதியவரை ஏமாற்றிய நபர் - நூதன முறையில் ஏடிஎம்மில் திருடியவர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் ஏ டிஎம்மில் பணம் எடுக்க வந்த முதியவரை குறி வைத்து நூதன முறையில் ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-05-14 14:58 GMT
சென்னை வளசரவாக்கத்தில் ஏ டிஎம்மில் பணம் எடுக்க வந்த முதியவரை குறி வைத்து நூதன முறையில் ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபாகரன் என்ற 65 வயதான முதியவர் ஆற்காடு சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றபோது, அவருக்கு உதவுவதாக கூறி அவரது ஏடிஎம் கார்டை வாங்கி நபர், பணம் இல்லை என்று கூறி விட்டு அவரிடம் வேறு ஏடிஎம் கார்ட்டை கொடுத்துள்ளார். வீடு திரும்பிய முதியவர் தனது வங்கி கணக்கில் இருந்து ஐம்பதாயிரம் எடுக்கப்பட்டதாக வந்த எஸ்எம்எஸ்  வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக போலீசாரிடம் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பார்த்தசாரதி என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்