அரிசியை வாங்க திரண்ட கூட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம்

காரைக்குடியில் நிவாரணமாக வழங்கும் அரிசியை வாங்க மக்கள் திரளாக கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Update: 2020-04-19 02:42 GMT
காரைக்குடியில் நிவாரணமாக வழங்கும் அரிசியை வாங்க மக்கள் திரளாக கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காரைக்குடியில் உள்ள மக்களுக்கு நிவாரணமாக அரிசி வழங்கும் நிகழ்வில் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ஒரே இடத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரிசியை வாங்க பலரும் முண்டியடித்து சென்றதால் கூட்ட நெரிசல் உருவானது. இதில் சிக்கிய பெண்கள் உள்ளிட்ட பலரும் படுகாயமடைந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்