மதுரை காமராஜர் பல்கலை.யில் ஆன்-லைன் பயிற்சி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பெங்களூரில் உள்ள தேசிய மன நல ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2020-04-19 02:36 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - பெங்களூரில் உள்ள தேசிய மன நல ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக பெங்களூருவில் இருந்து இணையதள செயலி வழியாக ஆன்-லைன் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் நடேசன், ஆசிரியர்கள் மற்றும் 50க்கு மேற்பட்ட மாணவர்கள்  கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்