மஹாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள் - தமிழகம் அழைத்து வர அரசுக்கு கோரிக்கை

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கி தவிக்கும் சீர்காழி பகுதி இளைஞர்கள் தங்களை மீட்டு தமிழகம் அழைத்து வர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-04-08 11:59 GMT
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கி தவிக்கும் சீர்காழி பகுதி இளைஞர்கள் தங்களை மீட்டு தமிழகம் அழைத்து வர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வாணகிரி, மாதானம், பகுதிகளை சேர்ந்த 43 பேர் மஹாராஷ் டிரா மாநிலம் கராடு என்ற இடத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தனர்.இந் நிலையில் ஊரடங்கு உத்தரவால்  அவர்கள் பணிபுரிந்த நிறுவனம் விடுமுறை அறிவித்தது. இதனால், அங்கிருந்து நடை பயனமாகவே தமிழகம் நோக்கி புறப்பட்டுள்ளவர்களை  சாங்லி மாவட்ட எல்லையில் போலீசார் பிடித்து அவர்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்தனர். இதனால், தமிழகத்தில் ஏதேனும் ஒரு இடத்திலோ, அல்லது மருத்துவமனையிலோ சேர்த்தால் போதும் என கண்ணீர் மல்க வாட்ஸ்அப் மூலம் தமிழக அரசுக்கு இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்