ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய ஆய்வாளர்

சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவினார்.

Update: 2020-04-05 03:00 GMT
சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவினார். அப்பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதும் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இதற்கு முன் காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தியது, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்