சென்னைக்குள் பயணிப்பவர்களுக்கான அனுமதி சீட்டு: மண்டல அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்- மாநகராட்சி ஆணையர் தகவல்
அவசர தேவைக்காக சென்னை மாநகரத்திற்குள்ளேயே பயணிக்க வேண்டிய நபர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்களிலேயே மண்டல அலுவலர்களிடம் அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
அவசர தேவைக்காக சென்னை மாநகரத்திற்குள்ளேயே பயணிக்க வேண்டிய நபர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்களிலேயே மண்டல அலுவலர்களிடம் அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். பிற மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டுவோர் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்று கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுவோர் ரிப்பன் மாளிகையில் பணிகள் பிரிவு துணை ஆணையரிடம் அனுமதி பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளார்.