வெளிநாடு சென்று வந்தவர்கள் யார் யார்? - விவரங்களை சேகரிக்கும் மாவட்ட நிர்வாகம்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலத்திற்குள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலத்திற்குள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது. படிப்பு, தொழில், சுற்றுலா, ஆராய்ச்சிக்காக வெளிநாடு சென்று திரும்பிய அனைவரும், தங்களது முகவரி, பயண விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.